Friday, July 28, 2006

தில்லையும் தமிழும்

வலையுலக அன்பர்களே,

இப்போது காரச்சாரமாக விவாதிக்கப்படும் சிதம்பரம் கோவில் விவகாரத்தில் சில கருத்துக்களை பதிக்க விரும்புகிறேன்.

கோவிலில் எந்த இடத்திலும் தமிழில் பாட எல்லோருக்கும் உரிமை உண்டு.
அதை தடுப்பது அடாவடித்தனம். இந்த இடத்தில் தமிழில் பாடலாம் இங்கு தமிழில் பாடக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. அது தவறு.

சில அறிவுக்கொழுந்துகள் "கர்பகிரகத்துக்குள் எல்லோரும் போக முடியுமா? அது சிலருக்கு மட்டும் பாத்தியதைப்பட்ட எல்லை" என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஐயா, கர்பகிரகத்திலும் யாரும் செல்லலாம். ஆனால் ஒவ்வொருவரும் உள்ளே செல்ல முற்ப்பட்டால் அனைவரும் கடவுளை வணங்க இடையூறு ஏற்ப்படும் என்றுதான் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மட்டும் அனுமதிக்கும் கட்டுப்பாடு (discipline) ஏற்ப்பட்டது. யாரையும் விலக்கி வைக்க ஏற்ப்பட்ட கட்டுப்பாடு அல்ல. பின்பு அதை விதியாக்கிவிட்டார்கள்.

பிறபக்தர்களின் சாமி தரிசனத்திற்க்கு தொல்லையின்றி இருந்தால் சிற்றம்பலத்தில் என்ன பொன்னம்பலத்தில் என்ன் கர்பகிரகத்திலும் (சிற்ற்ம்பலமும் கர்பகிரகமும் ஒன்றே என்றாலும்) பாடலாம். தமிழில் கண்டிப்பாக பாடலாம். இதை தீட்சிதர்களும் உணரவேண்டும். ஏனையோரும் உணரவேண்டும்.

திருச்சிற்றம்பலம்

Wednesday, July 12, 2006

மும்பை பயங்கரம்

மும்பை குண்டுவெடிப்புச் செய்தி மனதை கலக்கமடையச்செய்கிறது.

எதற்க்காக? ஏன்?

யாருக்கு லாபம்?

இறந்தவர்களுக்கு என் அஞ்சலி.

Wednesday, July 05, 2006

அகர முதல் எழுத்து

ஆழிப்பெருங்கடலாய் அலை மோதும் எண்ணப்பெருக்கை, சுழன்று அடிக்கும் கனவுகளை, கற்பனைகளை கைகளால் அள்ளிப் பருகும் அருமுயற்சி.

அதாகப்பட்டது

உரையாடலும் சம்பாஷணைகளும் குறைந்துவிட்ட இக்காலகட்டத்தில் மனதில் அரும்பும் விஷயங்களை பகிற்ந்துகொள்ள வலைப்பதிவுகள் ஒரு சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது.

தமிழில் எழுதவேண்டுமென்ற என் ஆவலாலும் ஆர்வத்தாலும் இந்த வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.

அன்புடன் கரை காண ஆதரிப்பீர்

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்  மும்மொழி திட்டம் என்றால்  என்ன? பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும். அவை ஆங்கி...