Wednesday, November 15, 2017

பினாமி ஆட்சி இல்லை. நேரடி ஆட்சிதான்

பினாமி ஆட்சி இல்லை. நேரடி ஆட்சிதான்

முதல்வர் ஆட்சி நடக்கிறதா? ஆளுநர் ஆட்சி நடக்கிறதா? எடப்பாடியின்  கூற்றுபடி ஆட்டமுடியாத அசைக்கமுடியாத அரசை ஆட்டிப்படைக்கிறதா மத்திய அரசு. 
காங்கிரெஸ்ஸை குறை சொன்ன பி ஜே பி, அதை விட மோசமாக நடந்து கொண்டு இருக்கிறார்கள். ஆளுநர் ஆய்வு கூட்டம் நடத்துவது ஒரு முன்னோட்டமே. கூடிய சீக்கிரம் எல்லைகள் விரிவடையும்.
வெட்கம், சூடு, சொரணை இல்லாத அமைச்சர்கள் இதை வரவேற்கிறார்கள். 
அ தி மு க வினர் இப்போ கொஞ்சம் நாளாத்தான் நிமிர்ந்து நிற்கிறார்கள். இனி மத்திய அரசு அதை அனுமதிக்காது. 
பி ஜே பி மற்றும் மத்திய அரசின் தலையீடு இனி அதிகரிக்கும். அ தி மு க என்கிற அடிமை கட்சியிடம் வேறு எதுவும் எதிர்பார்க்கமுடியாது.
எல்லோரும் இது பினாமி ஆட்சி என்று நினைத்தோம். அது முற்றிலும் தவறு. பினாமி ஆட்சி இல்லை இது நேரடி ஆட்சிதான்.
குடும்பத்தில் தலைவர் சரியில்லை என்றால் யார் வேண்டுமென்றாலும் புகுந்து நாட்டாமை செய்வார்கள். அதுதான் இங்கே நடக்கிறது.
ரஜினி படத்தில் வரும் காமெடி போல் மாப்பிள்ளை (முதல்வர்) இவர்தான் இவரு போட்டிருக்கிற சட்டை (அதிகாரம்) என்னுடையது என்பது போல் இருக்கிறது.
இவர்கள் கட்டமைக்கிற பிம்பம் புரிகிறது. சொல்லும் செய்தியும் புரிகிறது.
எல்லோருடைய வேடமும் புரிகிறது.
தமிழகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. 





No comments:

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்

மும்மொழி திட்டமும் ஹிந்தி திணிப்பும்  மும்மொழி திட்டம் என்றால்  என்ன? பாடத்திட்டத்தில் மூன்று மொழிகள் படிக்க வேண்டும். அவை ஆங்கி...